நாட்டின் பாதுகாப்பை எதிரிகளிடம் அடகு வைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய கூட்டணியைத்
தோற்கடிப்பைத் தவிர நாட்டைக்க காப்பாற்ற வேறு வழி இல்லை
முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்
1.என்ன ? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசியக் கூட்டணி அரசு நாட்டை எதிரிகளிடம் அடகு வைத்து?
ஆச்சர்மாய் இருக்கிறதே!
ஆம். கடந்து ஐந்து ஆண்டுகளின் நமது ஆட்சியாளராக இருக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டணி நமது நாட்டிற்கு இராணுவ ரீதியில் மிகப் பெரிய ஆபத்துகளை உருவாக்கியிருக்கிறது.
நமது தெற்கு எல்லையை – அதாவது தமிழ்நாட்டு எல்லையை–அது சீனா மற்றும் பாகிஸ்தானுக்குக் கடந்த ஐந்து வருடங்களின் முழூமையாகத் தாரை வார்த்து விட்டிருக்கிறது. இதனால் இராணுவ ரீதியாக பிரச்சனைகள் அற்ற பகுதி என்று இதுவரை அறியப் பட்டிருந்த தென் இந்தியப் பகுதிஇ தற்சமயம் எதிரி நாடுகளில் இராணுவங்காளல் தாக்கப்படும் தூரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கைக்கரியத்தை காங்கிரஸ் கூட்டணி அரசே முன் நின்று செய்திருக்கிறது.
இது போதாதென்றுஇ நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நாடுகளின் நிறுவனங்களுக்குத் திறந்து விடும் போக்கில் பல எதிரி நாடுகளின் இராணுவங்களின் தொடர்பு கொண்டிருக்கம் நிறுவனங்களை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அது நாட்டின் தொழில் தொடங்க அனுமதித்திருக்கிறது. இதனால் நம் ஒவ்வொருவரின் குடும்பம் மற்றும வேலை போன்ற செய்திகளையும் இந்த நிறுவனங்களை திரட்டத் தொடங்கியிருக்கினறத. நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படும் சுயுறு மற்றும் ஐடீ போன்ற நிறுவனங்கள் அரசின் இந்தப் போக்கை எதிர்த்திருக்கின்றன. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி அரசு எதையும் கண்டு கொள்ளவே இல்லை.
2. ஏப்ரல் 24 2009 ஆம் தேதியன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதளுக்கு இது
குறித்து பேட்டி அளித்திருக்கிறாரே… அந்தப் பேட்டியில் இலங்கை என்ற குழம்பிய குட்டையில் சீனா மீன் பிடித்துக்கொண்டிருக்கின்றது. அங்கு தெளிவான ஒரு செயல்திட்டத்துடன் அது செயல்பாட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சீனா போட்டுக்கொண்டிருக்கும் கணக்குகளை நம் திட்டக் கொள்கைகள் ( Pழடiஉநைள ) கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கின்றன ‘’ என்று கூறியிருக்கிறாரே?
இந்தக் கடைசி நேரத்திலாவது தமிழர்களுக்கெதிராக சீனா. தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று
அவர் ஒப்புக்கொண்டாரே…அதற்காக அவருக்காக நாம் நன்றி சொல்லுவோம். ஆனாலும் காங்கிரஸ் தலைமையிரான ஐக்கிய தேசியக் கூட்டணி அரசின் ‘திட்டக் கொள்ளைகள்’ சீனாவின இலங்கை நடவடிக்கைகளைக் கணக்கின் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறியிருபபது அப்பட்டமான பொய் ஏனெனில் காங்கிரஸ் அரசு இந்த விசயத்தில் எவ்வளவு அசிரத்தையாக இருந்துள்ளது என்பதையே எங்கள் ‘’ முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்’’ வெளியிட்டுள்ள ‘’சீனாவின் முற்றுகையில் இந்தியா’’ என்று புத்தகம் தக்க ஆதாரங்களுடன் நிறுவியிருக்கறது.
3.உங்கள் பதில் பொத்தாம் உள்ளது. உங்கள பத்தகத்திலிருந்து சிதம்பரத்தின் கூற்று பொய்யானது என்பதை நிறுவும் குறிப்பான எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்?
முடியும். தமிழ் நாட்டிற்கும் இலங்கைகும் இடையில் உள்ள எல்லையை கடந்த ஐந்து ஆண்டுகளின் எவ்வாறு எதிரி நாடுகளின் கைகளின் காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்படைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முதலில் பார்ப்போம்.
சேதுக் கால்வாய் திட்டம் தமிழ்களின் கனவுத் திட்டம் என்று தி;.மு.க. கூறியது. அதன் கூற்றை காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டது. 2005 ஐ_லை 2 ஆம் தேதியன்று அந்தத் திட்டற்கான பணிகள் துவங்கின
நம் கப்பற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் நாட்டின் மேற்குத் துறைமுகங்களில் இருக்க கிழக்குத்
துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இலங்கையை சுற்றித்தான் இன்று போக வேண்டியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டில் வங்காள தேசத்துக்கான போரின் போது இலங்கை அரசு நமக்கு சாதமாக செயல்படவில்லை. பாகிஸ்தானுக்கு சாதகமாகவே அது நடந்து கொண்டது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் . நம் போர்க் கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்வதென்பது ஆபத்து மிகுந்த செயலாகக் கருதப் பட்டது. எனவேதான் சேதுக் கால்வாய் தோண்டப் பட்டால். அது நம் போர்க் கப்பல்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் திட்டமாக அமையும் என்று இராணுவ ஆலோசகர்கள் கூறினர்
2005 ஆகஸ்டு மதாம் இலங்கை அதிபர் சந்திரிகாவை சீன அரசு தம் நாட்டிற்கு வருமாறு அழைத்தது. ஆகஸ்டு 28 ஆம் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் முடிவில் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டார்
சேதுக் கால்வாயின் தெற்கு துழைவாயிலுக்குக் தென்கிழக்கு திசையில் சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் நோரோச்சோலை என்ற இலங்கை கிராமம் உள்ளது. இது புத்தளம் நகருக்கு அருகாமையில் உள்ள ஓரு பகுதியாகும். இந்த பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்கான அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்திருந்துத.அந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியினை இந்திய அரசின் நிறுவனமான ‘’தேசிய அனல் மின் கழக்த்துகுக்’’ (யேவழையெட வுhநசஅயட Pழறயச ஊழசிழசயவழைn) கொடுப்பதாக அது அறிவித்திருந்தது. ஆனால் 2005 ஆகஸ்டு சீனப் பயணத்திற்குப் பிறகு இலங்கை அதிபர் அந்த முடிவை மாற்றியிருப்பதாக அறிவித்தார். மின்நிலைப்பணிகளை சீனாவிற்குக் கொடுக்கவிருப்பதாக அறிவித்தார். மின் நிலைத்திற்கான பணிகளை சீனர்கள் ஈடுபட்டால் சேதுக் கால்வாயை அவர்களால் எளிதில் கண்காணிக்க முடியும் .இருப்பினும் அந்த முடிவை மாற்ற காஙகிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளப்வில்லை.
2006 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்பே மேலும் ஓரு ஆதிர்ச்சிமிக்க செய்தியை வெளியிட்டார். சேதுக் கால்வாயின் தெற்கு நுழைவாயிலுக்குத் தென்கிழக்கிலும் நோரோச்சோலைக்கு வடமேற்கிலும் உள்ள Pநயசட1 என்ற கடல் பகுதியை சீனாக்கு அளிப்பதாக அவர் அறிவித்தார். இப்பகுதிக் கடலின் தரையில் பெட்ரோல் மற்றும் எரிவாயு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக சீனாவுக்கு இந்தக் பகுதி வழங்கப் பட்டுள்ளதாக. அவர் கூறினார் இந்தப் பகுதி சேதுகால்வாயின் தெற்கு நுழைவாயில் இருந்து 20 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் இருந்துகொண்டு சேதுக் கால்வாயின் உள்ள இராணுவ மற்றும் வர்த்தகக் கப்பல்களின் நடமாட்டத்தை சீன நிறுவனங்களால் தொடபு கண்காணிப்புக்கு உட்படுத்த முடியும்.
இராணுவ ரீதியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் எடுக்கப்பட்ட மிக மோசமான நடவடிக்கை இது என்றாலும் கூட என்ன காரணத்தாலோ காங்கிரஸ் கூட்டணி அரசு ராஜபக்சே அரசிடம் இதனை எதிர்த்து ஓரு வார்த்தை கூட பேசவில்லை.
2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறிவதற்காக இலங்கை அரசு உலக அளவிலான டெண்டரை வெளியிட்டது. இந்தப் பணியை எடுக்க இந்திய அரசின் நிறுவனமான ழுNபுஊ போட்டியிட்டது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலாளி ஒருவருக்கு சொந்தமான இந்தியாவில் இருந்து
இயங்கும் தனியார் நிறுவனமான ஊயசைn ஐனெயை என்ற நிறுவனத்திற்கே கடைசியில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ழுNபுஊ நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைத்திருந்தால் நோரோச்சோலையிலும் இ Pநயசட 1 கடல் பகுதியிலும் உள்ள சீன நிறுவனங்களை அருகில் இருந்தே இந்திய உளவு நிறுவனங்கள் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. ழுபெஉ –க்கு இந்த ஒப்பந்தம் கிடைக்க காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2009 ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து 4 ஆம் தேதிவரை மத்திய கிழக்கு நாடான கட்டார் நாட்டின் வெளி உறவு அமைச்சரும் அந்த நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களும் இலங்கை வந்து சென்றனர் இலங்கையில் தமிழர் வாழும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கில் தொழில் தொடங்க அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். மேலும் தமிழ் நாட்டின் ராமநாதபுர மாவட்டத்திற்க்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் வளைகுடாக் கடல் பகுதியில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளை கட்டாருக்குக் கொடுக்க இலங்கை அரசும் இசைந்துள்ளதாகத் தெரிகிறது கட்டாருக்கு இந்தப் பகுதிகள் கொடுக்கப்பட்டால் அவை பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டதாகவே நாம் கருத வேண்டும்.. ஏனேனில் கட்டார் பாகிதானுடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்ட ஒரு நாடாகும். இதை எதிரத்தும் என்ன காரணத்தினாலோ இந்திய அரசு எந்தவித நடவடிக்கைரயயும் இன்றுவரை எடுக்கவில்லை.
2009 ஏப்ரல் 8 தேதியிலிருந்து 10 ஆம் தேதிவரை இலங்கை அதிபர் லிபியா நாட்டிற்குச் சென்றிருந்தார். இலங்கையுடன் சீரான உறவு இல்லாத அந்த நாடு ராஜபக்சேவின் பயணத்திற்குப் பிறகு இலங்கைக்கு உடனடியாக 50 கோடி டாலரை உதவியாக அளிப்பதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சிர்யத்துக்குள்ளாக்குவதாக இருநத்து. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை நகரின் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி திருகோணமலையையும் கொழும்புவையும் இணைக்கும் சாலையின் ஓரு பகுதியை அமைக்கும் பணியை லிபிய நிறுவனங்களுக்கு அளிப்பதாக ராஜபக்சே அறிவித்தார். கட்டார் நாட்டு முதலாளிகளைப் போலவே லிபிய நாட்டு முதலாளிகளும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டாரைப் போலவே பாக் வளைகுடாவில பெட்ரோல் மற்றும் இயற்கைஎரிவாயுவைக் கண்டறியும் பணியிலும் ஈடுபட லிபிய நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்தனர். இலங்கை அரசும் அவற்றை லிபிய அரசுக்குக் கொடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்துடன் மிகவும் நெருங்கியத் தொடர்பு கொண்ட நாடே லிபியா. 1971 ஆம் ஆண்டின் நடந்த இந்திய பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு மறு சீரமைப்புக்கு லிபியாவே பெரிய அளவில் உதவியது. மேலும் 1974 ஆம் ஆண்டின் அணு குண்டை உருவாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று கூறிய நாடே லிபியா. வெறும் முழுக்கத்தோடு மட்டும் அது நிற்கவிi;லை. மாறாக அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான யுரேனியம் தாதுவை தன் அண்டை- நாடான நைஜர் நாட்டிலிருந்து வாங்கிய பாகிஸ்தானுக்கு அது கொடுக்கவும் செய்தது.
எனவே தான் இலங்கையிலும் அதன் மேற்குக் கடல் பகுதிலும் லிபியாவுக்கு இடம் கொடுப்பதென்பது பாகிஸ்தான் இராணுவத்திற்குக் கொடுப்பதாகவே நாம் கருதவேண்டும் பாக் வளைகுடாவில் லிபியா மற்றும் கட்டாருக்கு
வழங்கப்படவிருக்கும் பகுதிகள் டீசதுக் கால்வாயில் இருந்து வெறும் 10கிலோமிட்டர் தூரத்திற்குள் தான் உள்ளது என்பதை இங்கு நாம் மனதில கொள்ளல் அவசியம்.
இதை தடுக்கவும் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை
எனவேதான் இந்தியாவின் தமிழ்நாட்டின் எல்லையில் இதுவரை இலங்கையே அண்டை நாடாக இருந்ததற்குப் பதிலாக இனிவரவிருக்கும் கலகட்டத்தில் சீனாவுமஇ லிபியாவும்இ கட்டாரும்இ பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உருவாகும் சூழ்நிலை உருவாயிருக்கிறது.
1951 ஆம் ஆண்டில் பண்டித ஜவகர்லால் நேரு திபெத்தை சீனாவில் ஒரு பகுதியாக அங்கீகரித்தது எப்படி இந்தியாவின் இறையாண்மைக்கு இன்றளவும் ஒரு ஆபத்தாக இருக்கிறதோ அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இந்தியாவின் தெற்கு எல்லையில் உருவாயிருக்கிது.
இந்த சூழ்நிலையைப் போக்க காங்கிரஸ் கூட்டணி அரசு இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
4. சரி. இந்தியாவின் தெற்கு எல்லையில் எதிரி நாடுகள் இலங்கை அரசின் உதவியுடன் காலூன்றக் தொடங்கியுள்ளன என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்தீகள். இவை தவிர வேறு ஆதாரங்கள் ஏதும் வைத்திருக்கீர்களா?
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் போர்வையில் எதிரி நாடுகள் நம் தென் எல்லையில்
வந்திறங்கியிருப்பதைப் போலவே இலங்கையில் தொழில் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டும் அவர்கள்
வந்திறங்கியிருக்கிறார்கள். அப்படி இறங்கிய சில நிறுவனங்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலையும் விடுத்திருக்கின்றன.
அவற்றின் ஒன்றுதான் மலேசியாவின் மிகப் பெரும் பணக்காரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் நிறுவனமான புடழடியட வுநடநஉழஅஅரniஉயவழைளெ ர்ழடனiபௌ (புவுர்) நிறுவனம். ஆனந்த கிருஷ்ணன் நம் நாட்டின் உள்ள ஏர்செல் நிறுவனத்தில் 74மூ பங்குகளையும் ளுருN னுவுர் நிறுவத்தில் 20 மூ பங்குகளையும் ளுரn குஆ- இல் 7 மூ பங்குகளையும் வைத்திருக்கிறார்.
ஆனந்த கிருஷ்ணன் சீன உளவுத்துறையின் கையாள் என்பதற்கான திட்டவட்டமான ஆதாங்கள் உள்ளன. அவை
ஆனைத்தையும் எமது இயக்கமான ’’ முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்;’’ வெளியிட்டுள்ள நூலான ‘’சீனாவின் முற்றுகையில் இந்தியா‘’ என்ற நூலில் விரிவாகப் பார்க்க முடியும்
இலங்கை அரசின் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் Nவுவு நிறுவனம் 35 மூ பங்குகளை வைத்திருதது. இந்தப் பங்குகளை ஆனந்தகிருஷ்ணனின் புவுர் நிறுவனத்திற்குக் கைமாற்றும் பணியில் ராஜபக்சே கடுமையான முயற்சிகளின் 2007 துவக்கத்தில் இறங்கினார். இதை எதிர்த்தி நீதிமன்றத்துக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூர்யாச்சி மர்மான முறையில் சாலை விபத்தில் 2008 பிப்ரவரியில் கொல்லப்பட்டார். 2008 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று Nவுவு நிறுவனத்தின் பங்குகள் புவுர் நிறுவனத்திற்கு வெற்றிகரமாகப் கைமாற்றப்பட்டன.
நமது அரசுக்கு சொந்மான டீளுNடு நிறுவனம் ஸ்ரீலங்கா டெலிகாமுடன் இணைந்து 2005-2006 ஆம் ஆண்டுகளில்
தூத்துகுடியையும் கொழும்புவையும் இணைக்கும் சுமார் 324 கிலோமீட்டர் நீளமுள்ள கடலடித் தகவல் தொடர்க் கேபிள் ஒன்றை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் நிறுவியது. இந்தக் கேபிளின் வழியாகதததான் டீளுNடு நிறுவனத்தின் பயனீட்டாளர்களால் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பும் தகவல்கள் யாவும் வெளியேறுகின்றன.
இந்தக் கேபிளைத் தனது கையாளான ஆனந்தகிருஷ்ணனின் நிறுவனத்திற்குக் கீழ் கொண்டு வந்திருப்பதன் மூலம் டீளுNடு நிறுவனத்திலிருந்து சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் சீன உளவுத் துறையால் கண்காணத்துப் பதிவுசெய்ய முடியும்.
இதைக் தடுக்கவும் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சீன நிறுவனங்களின் நடமாட்டம் இலங்கையில் வெகுவாகப் கூடியிருக்கிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்திய நிறுவனங்களைக் கொண்டே இலங்கைக்குள் சீன உளவு நிறுவனமான ஆளுளு உடன தொட்பு கொண்ட நிறுவனங்களை அழைத்து வந்திருப்பதுதான்
ஹ{வர்வெய் என்பது சீனாவின் முன்னணித் தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பு நிறுவனமாகும். அந்த நிறுவனம் இந்தியாவின் பெங்களுரில் 1999ஆம் ஆண்டிலிருந்து தன் அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் சீன உளவு நிறுவனத்துடன் தொடர்புடைய ஓர நிறுவனமென்று இந்திய உளவு நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தன.
உலகமயமாதல் காய்ச்சலில்; இந்தியா உச்சபட்சமாக பீடிக்கப்பட்டிருந்த காலம் அது என்ற காரணத்தால் அந்த
நிறுவனத்தை நாட்டிலிருந்தது வெளியேற்றிவது எளிதான காரியமாக இருக்கவில்லை.இருப்பினும் அன்றைய உள்துறை
அமைச்சர் எல்.கே.அத்வானி அந்த நிறுவனத்திற்குக் கடும் எச்சரிக்கையை விடுத்தார்
2006 ஆம் ஆண்டின் இறுதியின் இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தன் சேவையைத் துவங்க முடிவு
செய்தது. 2007 ஏப்ரலில் அதற்கு ராஜபக்சே அனுமதி அளித்தார்.2007 செப்டம்பரில் இலங்கை முழுவதும் தனக்கான தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பை நிறுவுவதற்கான 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்த்தை (எந்த நிறுவனம் சீன உளவுத்துறைடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுருக்கிறது என்று இந்திய உளவு துறையால் 2001 ஆம் ஆண்டிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கபடடதோ அதே) ஹ{வாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்தார்.
ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டும் காணாததுமாக விட்டுவிட்டுது. தாலிபான் தீவிரவாதிகளுக்கு இன்றுவரை உதவிவரும் சீன உளவுத்துறையின் நீட்டிப்பாக யெசல்பட்டுவரும் ஹ{வாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் அளித்ததைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் அரசுதான் எல்.கே.அத்வானியை தாலிபான் தீவிரவாதிகளுக்கு 1999 ஆம் ஆண்டின் துணை போனார் என்று கூச்சமே இல்லாமல் இன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஏர்டெல்லை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டிக்காததன் காரணத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்காணக்கான சீனப் பொறியாளர்கள் இலங்கை முழுவதும் பரந்து நிறைந்திருப்பர்.
இதோடு மட்டும் சீனாவில் ஊடுருவல் நிற்கப்போவதில்லை.
தென்இலங்கையில் அம்பாந்தோட்டத்தை துறைமுகத்தில் கட்டமைப்புப் பணிகள் ராஜபக்சே அரசினால் சீனவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த துறைமுகம் சீனக் கப்பற்படையின் கேந்திரமாக செயல்படப் போகிறது. என்று மேற்குலக உளவு நிறுவனங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு நாடுகளான லிபியா கட்டார் மற்றும் ஈரானுக்கு ராஜபக்சே அரசு பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களைக கொடுத்துள்ளது. அவை அனைத்தையும் நடை முறையில் செயல்படுத்தப் போவது சீனாவின் பொறியாளர்களே.
பல நூறு கிலோமீட்டர் வீச்சுள்ள துலு113னு என்ற சீன ராடார் கருவியை இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டில் இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி வாங்கியது. கொழும்பிற்கு அருகில் உள்ள மிரிகாமா நகரில் வைக்கப்பட்டிருக்குகம் அந்த ராடாரை இயக்குவது சீனப் பொறியாளர்களே. தமிழகத்தின் தென்கோடியிருந்து. மேலெழும் அனைத்து விமானங்களையும் இந்த ராடரால் கண்கணிக்க் முடியும்.
இவை எதையும் காங்கிரஸ் கூட்டணி அரசு தடுக்கவில்லை.
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக ராஜபக்சே அரசு செயல்படுகின்றது. என்று தெரிந்த பின்னரும் கூட அந்த அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளை காங்கிரஸ் அரசு வழங்கி வருவதுதான் காங்கிரஸ் கூட்டணி தேசத் துரோகத்தில் ஈடுபடும் ஒரு கூட்டணியோ என்ற ஓர சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாகக் கொழும்புத் துறைமுகத்தைக் கைப்பற்றும் பணியில் சீன நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன.
அந்த நிறுவனங்களுக்கு ராஜபக்சே அரசு உதவிசெய்து வருகிறது. கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் சுமார் 70 மூ இந்தியாவில் இருந்து செல்லும் சரக்குகளே என்பதை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். இந்திய சரக்குகளை இனி சீன நிறுவனங்களின் கண்காணிப்பில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகவிருக்கிறது.
இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறேன் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசால் இதையும் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவேதான் காங்கிரஸ் கூட்டணி அரசு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற சந்தேகம் எழும்பியிருக்கிறது. எதிரி நாடுகளில் நிறுவனங்களுக்கே காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியிருக்கிறது என்பதையே சமீப காலத்தின் ஆதாரங்கள் உறுதி செய்வதாக உள்ளன
5.இலங்கை என்புத சுதந்திரமான ஒரு நாடு. அந்த நாட்டின் அரசுதான் எந்தத் திட்டத்தை யாருக்குக் கொடுப்புது என்பதைத் தீர்மானிக்க முடியும். நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் இந்தியாவிற்குததான் கொடுக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?
இலங்கையின் கட்டமைப்புத் திட்டங்களை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்புது எம் வாதமல்ல. மாறாக கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இலங்கையின் கட்டமைப்புத் திட்டங்கள் யாவும் இந்தியாவின் ராணுவ எதிரிகளிடம் ஏன் ஒப்படைக்கப் பட்டுக் கொண்டியிருக்கின்றன. என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. இவை தற்செயலான ஒன்றாக இருக்க சாத்தியமில்லை ஏனெனில் மகிந்த ராஜபக்சேவே 2007 ஆம் ஆண்டு பிப்ரவரயில் சீனாவுக்குபு; பயணமானபோது சீனாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தம் நாடு அனைத்து விதங்களிலும் முன்னுரிமை கொடுக்கும் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதையே அவரது அரசு நடைமுறைப் படுத்தியும் வருகிறது.
அதை ராஜபக்சே நடைமுறைப்படுத்துவதில்கூட பிரச்சனை இல்லை காங்கிரஸ் கூட்டணியினால் ஆன இந்திய அரசு ஏன் அதை எதிர்க்கவில்லை என்பதே நம் முன் இருக்கும் மிகப் பெரும் கேள்வி.
2002 ஆம் ஆண்டில் ரணில் விக்கரமசிங்கே இலங்கையின் பிரதராக இருந்தார். விடுதலைப் புலிகளுக்குப் இலங்கை
அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலம் ஆத. ஆந்த ஆண்டில் அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். புயணத்திற்குப் பிறகு இலங்கையின் சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தையும் ளுஐNழுPநுஊ என்ற சீன அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக அவரது அரசு அறிவித்தது.
இதை வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.அரசு கடுமையாக எதிர்த்தது.எதிர்த்ததோடு நிற்காமல் திருகோணமலையில் உள்ள 99 எண்ணைக் கலன்களைத் தனக்கு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை அது நிர்ப்பந்தித்தது.சில்லரை விற்பனை மையங்களை தனக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுத. முடிவில் பா.ஜ.க. கூட்டணியின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுது.100-க்குக் அதிகமான பெட்ரோல் சில்லரை விற்பனை மையங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டன. திருகோணமலையின் எண்ணைக் கலன்களையும் அந்த நிறுவனத்திடமே இலங்கை அரசு ஓப்படைத்தது. ளுஐNழுPநுஊ நிறுவனம் இலங்கை அரசால் முற்றிலும் ஒதுக்கப் பட்டது.
இலங்கை அரசால் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு பா.ஜ.வின் முன்னுதாணம் இருந்தும் கூட ராஜபக்சேவின் அரசை இந்தியாவின் இராணுவ எதிரிகளோடு கூட்டு சேர காங்கிரஸ் கூட்டணி அனுமதித்தது ஏன்?
6.இலங்கையைப் பொருத்தவரை காங்கிரஸ் கூட்டணி அரசினால் இந்தியாவின் பாதுகாப்புகு;குப் பெரும் பின்னடைவும்
ஏற்பட்டுள்ள என்ற உள்களின் வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. இந்தியாவிற்குள்ளேயே அந்நிய உளவு நிறுவனங்களை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்துள்ளுத என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களைத் தர முடியுமா?
2005 ஆம் ஆண்டின் இறுதியில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் ஆனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம்
அப்போலோ மருத்துவமனை ரெட்டி குடும்பத்துடன் சேர்ந்து தனதாக்கிக் கொண்டுது. முன்னதாக 2004 ஆம் ஆண்டில் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனமான ஆஸ்ட்;ரோ தமிழ்நாட்டின் சன்நெட்வொர்க் நிறுவனத்துடன் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தாயரிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏர்செல் நிறுவனத்தைக் கையகப் படுத்திய உடனேயே அந்த நிறுவனம் எடுத்த முதல் முடிவு தன் சேவையை உள்நாட்டுப் பிரச்சினைகள் நிறைந்த சீன இராவணுவத்துடன் 1950-களிலிருந்தே தொடர்புகொண்ட வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்றுததான். அடுத்த இரண்டு வருடங்களில் அந்தப் பகுதியின் முன்னணி செல் போன் நிறுவனமான ஏர்செல் மாறிவிட்டிருக்கிறது.
ஆனந்த கிருஷ்ணனின் பின்னணியை இன்றுவரை காங்கிரஸ் கூட்டணி அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.அவர். சீன உளவுத் துறையின கையாள் என்புத முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம் வாதம்
அதற்கான போதிய ஆதாரங்களை சீனாவின் முற்றுகையில் இந்தியா புத்தகம் முன் வைக்கின்றுத.
ர்வைஉhளைழn Pழசவ ர்ழடனiபௌ-ற்கு அதன முதாலாளி லீ கா ஷிங் சீன சாரபுடையவர் என்பதால் 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தடை விதித்து. ஆனால் அதே நேரம்1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 தொடக்கம் வரை அதன் சகோhதார நிறுவனமான (அதாவது அதே லீ கா ஷி-கிற்கு சொந்தமான) ர்ரவஉh வுநடநஉழஅ நிறுவனத்தால் இந்தியா இயங்க முடிந்திருக்கிறது
என்பது தான் ஆச்சரிமான விஷயம். மத்திய அரசின் (ஆத காங்கிரஸ் ஆனாலும் பா.ஜ.க.ஆனாலும்) குழப்ப நிலையையே இந்த செய்தி உணர்த்திகிறது.கடைசியில் ர்ரவஉh வுநடநஉழஅ இந.தியாவை விட்டு வெளியேறியதற்கான காரணம் வேறு. இது
ஹ{வாவெய் நிறுவனத்தை 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆஸ்திரேலியா கனடாவும் அமெரிக்காவும் தம் நாட்டின் நிறுவனகளுடன் கூட்டு வைப்பதற்கு அனுமதி மறுத்திருக்கின்றன. ஆனால் கூட்டணி அரசோ அது இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக கொள்வதை ஆதரித்தே வந்திருக்கிறது.
ஹ{வதவெய்-யுடன் விலையன்சும் டாட்டவும் கூட்டு வைத்ததை ஆத கேள்விக்குள்ளாககவில்லை. காங்கிரஸ் கூட்டணியின் தகவல. தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நாட்டின் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்வேண்டும் என்ரேயொழிய அதற்கான ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை;. இதுதான் கடந்த ஐந்து வருட காங்கிரஸ் ஆட்சியினால் நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலை.
இந்த நிலை காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நீடிக்கும் தவிர மறையாது.
எனவே தான் நம் நாட்டினை எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் நமக்கிருக்கும் ஓரே வழி அந்தக் கூட்டணியை முறியடிப்புது மட்டுமே.
இவ்வாறு முறியடிப்பதன் மூலம் நாட்டின் பிற கட்சிகளை காங்கிரஸ் கட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டிற்கெதிரான செயல்திட்டங்களியிருந்து விலகிச் செல்ல வைக்கமுடியும் என்பதே நம் எதிர்பார்ப்பு
7. இளைஞர்களால் ஆன உங்கள் இயக்கம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த முயற்சியை எண்ணும் போது பெருமையாக இருக்கிறது. நாட்டை அச்சுறுத்தும் காங்கிரஸ் அரசின் தவறுகளை மக்களிடம் எப்படி கொண்டு போகப் போகிறீர்கள்
புத்தகதோடு எங்கள் பணியை நிறுத்தும் திட்டம் எமக்கில்லை. களத்திலும் இறங்குகிறோம். காங்கிரஸ் அரசின் முக்கிய மந்திரிகளில் ஒருவரான ப.சிதம்hரத்தை எதிர்த்து சிவகங்கைத் தொகுதியில் எங்கள் இயக்கத்ததைச் சேர்ந்த இளைஞர் ஓருவர் போட்டியிடுகிறார். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் சிவகங்கையிலும் இன்னபிற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அரசின் கடந்த காலத் தவறுகாளல் நாட்டிற்க்கு உருவாகியிருக்கும் இன்னகளை விலக்கித் பிரச்சரத்தில் தற்சமயம் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.
நன்றி - முத்துக்குமார் நண்பர்கள்
இதற்கு பின்னும் தேசபக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
அப்ப நீங்க ?
செவ்வாய், 5 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக